Description
புகழ்பெற்ற குதுப்தீன் ஐபக் மன்னரால் தில்லி மாநகரில் நிர்மாணிக்கப்பட்டதுதான் குதுப்மினார்.
முஸ்லிம் மன்னர்கள் ஆண்ட இந்திய வரலாற்றை குழந்தைகளுக்குப் புரியும்படி கதை வடிவில் குதுப்மினாரே சொல்வதுதான் இந்நூலின் சிறப்பு.
முஸ்லிம் மன்னர்களின் வளர்ச்சி, வீழ்ச்சி, எழுச்சி, தேக்க நிலை, பொருளாதார உயர்வு, கலகங்கள், இஸ்லாத்தின் பொற்காலங்கள், அதற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகிய அனைத்து நிலைகளையும் இரத்தினச் சுருக்கமாக இந்நூலில் பதிவு செய்துள்ளார் பேரறிஞர் அபுல் ஹஸன் அலீ நத்வி (ரஹ்).
பாடப்புத்தகங்களில் முஸ்லிம் மன்னர்களின் வரலாற்றை மறைத்தும் திரித்தும் கற்பிக்கப்படும் இவ்வேளையில், இந்நூலை வாசிக்கும் குழந்தைகள் உண்மை வரலாற்றை அறிந்து கொள்வார்கள்.
Reviews
There are no reviews yet.